Sunday 9 December 2012

அப்பாவிகளை குறிவைக்கும் டுப்பாக்கி

வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில் இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள் இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி! 

தீவிரவாதம் என்றாலே, அதை பைஜாமா + தாடியுடன் பாகிஸ்தானில் இருந்து வரும் பாய்மார்களுக்கு என ஒட்டுமொத்த குத்தகைக்கு கொடுத்து விட்டது தமிழ் சினிமா. முதலில் அந்த வேலையை ‘கேப்டன்’ என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் செய்தார். அவரது படங்களில், பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பவன் கூட பாகிஸ்தான் தீவிரவாதியாகத்தான் இருப்பான். உள்ளூர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து கொண்டு, விமானம் ஏறி டில்லி சென்று, சிபிஐ அதிகாரிகளைக் கூட ஓரங்கட்டி உட்காரச் செய்து விட்டு தனியாளாக நாட்டைக் காப்பாற்றுகிற ‘டகால்டி’ வேலைகளை அவரைக் காட்டிலும் தெளிவாகச் செய்ய இன்றுவரை ‘பீல்டில்’ ஆளில்லை. அவரளவுக்கு இல்லாவிட்டாலும், நிறைய படங்களில் ‘ஆக்ஷன் கிங்’ என்பாரும் நாட்டை காப்பாற்றினார். 

Saturday 3 November 2012

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்


அஸ்ஸலாமு அலைக்கும்.

எல்லோரும் நலமா?

செய்தி தாள்களில் என்ன முக்கியமான செய்தி என்று பார்த்து கொண்டிருக்கையில் இந்த விஷயம் கண்ணில் பட்டது

Wednesday 17 October 2012

நீங்க சென்னையா தமிழ் நாடா?

எங்கு திரும்பினாலும் பவர் கட் பேச்சு தான். பவர் ஸ்டார் கைது பற்றி பரபரப்பு செய்தி பற்றி கொண்ட போது அதிகம் பற்றி கொண்டு எரிந்தது (பின்னே, இரண்டு பவரையும் ஒரே நேரத்துல கட பண்ணுனா சும்மா விடுவாய்ங்களா:)). சமீபத்தில் வந்த செய்திகளில் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் அறிவித்த / அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடந்து கொண்டு இருக்கின்றன சென்னையை தவிர. அப்ப சென்னை தமிழ்நாட்டுல இல்லையா?

Sunday 14 October 2012

முதல் 10 நாட்கள்

அஸ்ஸலாமு அலைக்கும். 
இந்த உலகை படைத்து பரிபாலித்து எல்லா உயிரினங்களுக்கும் உணவளித்து நம்மை மரிக்க செய்து பின் நம்மை உயிர்ப்பிக்க செய்வானே, அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் துல்காயிதாவில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் அல்லாஹ்வின் பேரருளால் மற்றுமொரு பெருநாளை எதிர்ப்பார்த்த வண்ணமாக இன்னும் சிறிது நாட்களில் துல்ஹஜ் மாதம் நம்மை அடைய இருக்கிறது. இந்த நன்நேரத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லித் தந்த வழியின்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அந்த இறைவன் நம் அனைவருக்கு அருள் என்ற பிரார்த்தனை செய்தவனாக நம் பதிவுக்குள் செல்வோம்.

Tuesday 9 October 2012

டாக் (விவாத) ஷோக்கள் - நிஜங்களை தொலைத்த நிழல்கள்

சீரழிவின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சீரியல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சி என்று எடுத்து கொண்டால் அது டாக் ஷோக்கள் எனப்படும் விவாத நிகழ்ச்சிகள் தான்.ஆனால் சில டாக் ஷோக்கள் எந்த அளவிற்கு மக்களை முட்டாள்களாக ஆக்குகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

 

Sunday 7 October 2012

இஸ்லாமிய எதிர்ப்பும், முஸ்லீம்களின் கடமையும் - தாவா தொடர்

அஸ்ஸலாமு அலைக்கும்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் மற்ற மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது. யார் இந்த நபர்? ஏன் இவருக்காக நாடு ரோட்டில் நின்று போராடுகிறார்கள் என்று மக்கள் ஆச்சர்யபடுகின்றனர் (ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலும், போது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், மற்ற மக்களின் சொத்துக்கோ, உயிருக்கோ பாதகம் ஏற்படும் வகையிலும் போராடியவர்களுக்கு எமது கண்டனங்கள். ஏனெனில் அது இஸ்லாம் கற்று தந்த வழி இல்லை)

Monday 1 October 2012

என்னை கதற வைத்த சென்னை

எனக்கும் சென்னைக்கும் இடையேயான உறவு சிறு வயது தொடங்கி அதிகமாக ஏற்போட்டோடு முடிந்து விடும். ஆம், என்னுடைய உறவினர்களை அழைக்க விமான நிலையத்துக்கு சென்று அழைத்து விட்டு விமான நிலையத்தையே சென்னை என்று நினைத்து சிட்டிக்கு செல்லாமலே திரும்பி விடுவோம். பிறகு 6 ஆவது வகுப்பு கோடை விடுமுறை (என்று நினைக்கிறேன்) யில் என்னுடைய உறவினர் வீட்டில் தங்கி ஒரு வாரம் ஊர் சுற்றி பார்த்து விட்டு வழக்கமாக செல்லும் மெரீனா பீச், பாம்பு பண்ணை பார்த்து விட்டு திரும்பினேன். அது தான் என் முதல் சென்னை சுற்று பயணம்.

Sunday 11 March 2012

மின்சார ஜோக்ஸ்

அப்பா : ஏண்டா ஆஃபிஸ்ல இருந்து ஒரு வாரமா வீட்டுக்கே வரல 

பையன் : ஆஃபிஸ்ல கரண்ட பிரச்சனை இல்லப்பா, ஒவர்டைம்னு சொல்லி அங்கேயே படுத்துக்குவோம், தண்ணீர் பிரச்சனை, கொசு பிரச்சனை, கரண்டு பிரச்சனைனு எதுவுமே இல்லப்பா 

அப்பா: இப்ப மட்டும் ஏண்டா வந்தே? 

பையன் : இன்னைக்கு sunday, ஆஃபீஸ் லீவு 

Sunday 12 February 2012

காங்கிரஸின் இட (வாக்கு) ஒதுக்கீடு


நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமுதாயத்தினரை முன்னேற்றும் விதமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்று 23 டிசம்பர் தேதி நாளிட்ட செய்திகளில் வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. 

Thursday 9 February 2012

கதீஜா

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை

கதீஜா

அன்று ஞாயிற்று கிழமை, வீட்டை ஒழுங்குப்படுத்தலாம் என்று எண்ணி கதீஜா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கதீஜா, வயது 35, BCom பட்டதாரி, ஒரு சின்ன பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து விட்டு தற்போது வீட்டை மட்டும் கவனித்து கொண்டிருக்கிற சாதாரண குடும்ப பெண்மணி. ஒரு ஆண் பிள்ளை, 9 வது படிக்கிறான், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். ரொம்ப நாட்களாக ஒரு அட்டை பெட்டியில் பொருட்கள் இருப்பது கண்டு அதை பரணில் போடலாம் என எண்ணி ஒரு நாற்காலியின் மேல் ஏறி பெட்டியை பரணில் வைக்கும் போது ‘பொத்’ என்று பேலன்ஸ் இல்லாமல் கீழே விழ தலையில் சிறிது அடிபட்டு பின்னர் தைலம் தடவி தலைவலி இல்லாமல் போனது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு இதே போல் தலைவலி வர இந்த தடவை மாத்திரை போட்டு தலைவலியை போக்கினார். அதன் பிறகு வலியை பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. 10 நாட்கள் கழித்து மறுபடியும் தலைவலி வரவே பயந்து போய் மருத்துவமனைக்கு சென்று MRT ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகு டாக்டர் சொன்ன செய்தி கேட்டு ஒரு நிமிஷம் என்ன செய்வதென்றே தெரியாமல் வித்தியாசமான மன ஓட்டத்தில் அதிரிச்சியாகி விட்டார். 

Tuesday 7 February 2012

சீரியல்களா? சீரழிவுகளா?



நம் தமிழ்நாட்டு கலாச்சாரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருவதை நாம் அறிகிறோம். கட்டிய கனவனை விட்டு மற்றவனோடு வாழும்/ ஓடும் பெண்களையும், கட்டிய பெண்டாட்டியை மதிக்காமல் திமிறாக ஓபனாகவே சின்ன வீடு வைத்துக் கொள்ளும் கனவன்மார்களையும் நாம் நித்தம் செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதியில் இது எங்கு போய் முடியுமா என்று பயப்படும் அளவிற்கு போய்விட்டது. 

அதிலும் திருமணமாகாத இளம்பெண்கள் கர்ப்பமாவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் இன்று சர்வ சாதரணமாகி விட்டது (திருமணத்திற்கு முன்பு பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று சொன்ன குஷ்புவை தான் வெளியில் விட்டுவிட்டார்களே). சமீபத்தில் பரவியிருக்கும் Living Together கலாச்சாரம் நம்முடைய இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு மணிமகுடம். திருமணமாகாத கல்லூரி பெண்கள் கர்ப்பமாவது என்ற காலம் தொடங்கி இப்போது பள்ளிப் பெண்களும் கர்ப்பமாகிக் கொண்டிருப்பது நம் அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. 

Sunday 5 February 2012

துன்பங்கள் சூழ்ந்தது தான் வாழ்க்கை


நாமெல்லாம் ஒரு சாதரண பிரச்சணை என்றாலே மனம் உடைந்து என்ன செய்வது என்று கவலைப்பட்டு கொண்டிருப்போம். ஆனால் சிலர் என்ன பிரச்சனை நடந்தாலும் வாழ்க்கை சென்று கொண்டு தான் இருக்கும் என்று மனதை திடப்படுத்தி கொண்டு தைரியமாக இருப்பர், அப்படி ஒரு நண்பரை இந்த தடவை விடுப்பில் இந்தியா சென்றிருக்கும் போது சந்தித்தேன். இந்த விடுப்பில் என்னுடைய குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலக் குறைவால் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனக்கோ பயங்கர வருத்தம். விடுப்பில் இருக்கும் போது மருத்துவமனையில் வந்து தங்கி இருக்கிறோமே என்று வருந்தி இறைவனிடம் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல பிராத்தித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு மாற்று மத சகோதரர் குங்குமம் வார இதழ் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தேன். எந்த ஊர், என்ன தொழில் புரிகிறீர்கள் என்பது போன்ற பரஸ்பர விசாரிப்புகளுக்கு அவர் சொன்ன செய்தி இதோ.

Thursday 19 January 2012

IIT IIM மாணவர்களின் விந்தனு தேவை - கலாச்சார சீரழிவு

சமீபத்தில் வெளியான செய்தி கண்டு கொதிப்படைந்தேன். 

அது IIT IIM போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விந்தனு தேவப்படுகின்றது என்ற வினோதமான விளம்பரம். அதில் அந்த விந்தனுவிற்கு 20,000 ரூ வரை தருவதாகவும், தங்களுடைய கைப்பேசி எண், மற்றும் தங்களின் மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு கொடுத்து அந்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் இது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது தான். 

நாடும் நடப்பும் - பகுதி 1

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் குறுகிய விடுமுறையில் (70 நாட்கள்)  இந்தியா சென்று திரும்பியதால் நான் கண்டவை / ரசித்தவை / பாதித்தவை மற்றும் என்னை பாதித்தவைகளை பற்றி . 

விண்ணை முட்டும் விலைவாசி

Courtesy : news.vikatan.com
ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போதும் விலைவாசி நினைத்து கொஞ்சம் இருப்பை அதிகம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து போன தடவை சிலவுக்காக ஒதுக்கிய நிதியை விட ஒவ்வொரு தடவையும் அதிகம் எடுத்து சென்றாலும் அதையும் தாண்டி இருக்கும் சிலவுகளை பார்க்கும் போது எப்படி நாம் ஊரில் வந்து செட்டில் ஆக போகிறோம் என்று மலைக்க தோன்றுகிறது. ஆனால் ஊரிலேயே வியாபாரம் செய்யும் சிலரோ சந்தோஷமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து சிலவு செய்வதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் அதில் ஒரு பேருண்மை இருக்கிறது, அதாவது ஊரிலேயே இருக்கும் பலர் வீண் அநாவசிய சிலவுகள் செய்வதில்லை, நாம் தான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று வீண் சிலவுகள் செய்து கையை கடித்துக் கொள்கிறோம். 

Wednesday 18 January 2012

இஸ்லாம் Vs கிறிஸ்தவம் விவாதம் - ஜனவரி 21, 22 தேதிகளில் ...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பின் சகோதர சகோதரிகளே, 

இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் ஜெர்ரி தாமஸ் தலைமையிலான கிறிஸ்தவ அறிஞர்கள் Vs ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான இஸ்லாமிய அறிஞர்களுக்குமிடையே நடக்கின்ற நேரடி விவாதம் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். 

விவாத தலைப்புக்கள் மற்றும் தேதி விவரம்:

21, 22 தேதிகளில்"பைபிள் இறை வேதமா" என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்.

28, 29 தேதிகளில் "குர்ஆன் இறைவேதமா" என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்.

இந்த விவாதம் உடனுக்குடன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடத்தப்படுவதால் தமிழல்லாத பிற மொழி மக்களும் பார்க்கலாம். (கிறிஸ்தவ அறிஞர் சகோ. ஜெர்ரி தாமசுக்கு தமிழ் தெரியாது. சகோ. பீஜே க்கு ஆங்கிலம் தெரியாது. எனவே இரண்டு பக்கமும் மொழி பெயர்ப்பாளர்கள் இருப்பார்கள்)

பாருங்கள், பாக்க தூண்டுங்கள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...