Sunday 9 December 2012

அப்பாவிகளை குறிவைக்கும் டுப்பாக்கி

வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில் இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள் இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி! 

தீவிரவாதம் என்றாலே, அதை பைஜாமா + தாடியுடன் பாகிஸ்தானில் இருந்து வரும் பாய்மார்களுக்கு என ஒட்டுமொத்த குத்தகைக்கு கொடுத்து விட்டது தமிழ் சினிமா. முதலில் அந்த வேலையை ‘கேப்டன்’ என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் செய்தார். அவரது படங்களில், பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பவன் கூட பாகிஸ்தான் தீவிரவாதியாகத்தான் இருப்பான். உள்ளூர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து கொண்டு, விமானம் ஏறி டில்லி சென்று, சிபிஐ அதிகாரிகளைக் கூட ஓரங்கட்டி உட்காரச் செய்து விட்டு தனியாளாக நாட்டைக் காப்பாற்றுகிற ‘டகால்டி’ வேலைகளை அவரைக் காட்டிலும் தெளிவாகச் செய்ய இன்றுவரை ‘பீல்டில்’ ஆளில்லை. அவரளவுக்கு இல்லாவிட்டாலும், நிறைய படங்களில் ‘ஆக்ஷன் கிங்’ என்பாரும் நாட்டை காப்பாற்றினார். 

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...