Saturday 30 November 2013

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1

'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10 

ஊரில் செட்டிலாக வேண்டும் என்று பலர் சொல்லி கொண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் சொந்த ஊரில், சொந்த நாட்டில் போய் செட்டிலாக வேண்டுமென்ற எண்ணமே பெரிய விஷயம். இதை சமயம் பார்த்து தான் நம் வீட்டில் உள்ளவர்களிடத்தில் சொல்ல வேண்டும். இதனால் பலரிடத்தில் இருந்து கேட்காமலே பல இலவச அறிவுரைகள்(?) வரும். இன்னும் சிலர் அவனை பார்த்தியா, அவனும் உன்னை போல் தான் வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்றான், எவ்வளவு கஷ்டப்படுறான்னு பார்த்தியா அப்படின்னு கேட்பார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான எண்ணமும் திறமையும் இருக்காது, சில பேர் hard work பண்ணுவார்கள், சில பேர் smart work பண்ணுவார்கள். Smart work is better than Hard work. அதே போல் நம்மை யாருடனும் கம்பேர் செய்ய வேண்டாம் என்று உங்கள் குடும்பத்தில் கட் அண்டு ரைட்டாக சொல்லி விடுங்கள், இதில் நீங்கள் நளினத்தை / பணிவை மேற்கொண்டால் உங்கள் வீட்டிலேயே உங்களை மாற்றி விடுவார்கள். 

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...