அஸ்ஸலாமு அலைக்கும்
நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீது மக்களின் கவனம் அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் நம் பிள்ளையும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் US (அப்படின்னா உழவர் சந்தையா?) செல்ல வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைக்கும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.