Saturday 28 March 2015

நேர்மையின் பரிசு என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்க ஒரு அரசாங்க வேலையுல இருக்கீங்க, பெயர் வேணாம். நல்ல நேர்மையான அதிகாரியா இருக்கீங்க, தனியாளா இருந்த உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாய்ங்க. இது வரை இருந்த நேர்மைக்கு லைட்டா சோதனை வருது. மனைவி லேசா ஆரம்பிக்கிறாங்க, அவுங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறீங்க. ஊர் உலகத்துல இல்லாததானு சொல்றாங்க, அப்படியும் அவுங்க கிட்ட சொல்லி அவுங்க மனச மாத்துறீங்க. இலஞ்சம் வாங்காததால மிரட்டல் வருது. லைட்டா பயமா இருந்தாலும் சமாளிக்குறீங்க. பின்ன குழந்தை பொறக்குது. அந்த குழந்தைக்காகவாவது மாறுங்கன்னு சொல்றாங்க குடும்பத்தினர். எப்படிம்மா தப்ப சரினு இவுங்களால சொல்ல முடியுதுனு அம்மாகிட்ட அழுது புலம்புரீங்க. பொழைக்க தெரியாதவனா இருக்கியப்பா, இந்த காலத்துலையும் பிள்ளையை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சிருக்க என்று ஏச்சுகளும், பேச்சுகளும் வருது. இருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியா இருக்கீங்க. இதுவெல்லாவற்றையும் தாண்டி இலஞ்சம் வாங்காததால ஊர் மாற்றம் பணி மாற்றம்னு ஊர் ஊரா சுத்துறீங்க. யார் வாய அடைச்சாலும் மனைவியும், பிள்ளையும் ஊர் ஊரா மாறி / நாறி போறத விரும்பாம தினம் தினம் கரிச்சு கொட்டுறாங்க. 

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...