டெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இஸ்லாமியர்கள் கூறும் அழகிய முகமனை கேலி செய்யும் விதமாக
"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
என்று கூறி முஸ்லீம்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டது. அதற்கு விளக்கமளிக்குமாறு தமிழ்மணத்தின் நிர்வாகியை தொடர்பு கொண்ட போது சகோதரர் இரமணிதரனுக்கும், தமிழ்மணத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் பொறுப்பற்ற பதில் வந்தது. அதுமட்டுமல்லாமல் நாகரிகமாக தனிப்பட்ட முறையில் மெயிலில் விளக்கம் கேட்டதை நக்கலடித்து உச்ச கட்டம். ஒரு வேளை அவர்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாததால் தானோ என்னவோ?
பொறுப்பற்ற பதில்:
பதிவருக்கு,
இரமணிதரனின் எங்கோ ஒரு தனிப்பதிவிலே சொன்ன அவரின் தனிப்பட்ட சொல்லாடல் உங்களைக் கேலி செய்கின்றதென்று கருதிக்கொண்டால், அதற்கு எதற்காகத் தமிழ்மணம் விளக்கம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? இரமணிதரன் அங்கே இச்சொல்லாடலைச் செய்தபோது, தமிழ்மணம் சார்பிலே சொல்கிறேனென்று சொல்லியிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தாமல்
http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html?showComment=1318339644384#c2814521872429044645 ,
எதற்காகத் தமிழ்மணத்துக்கு அனுப்புகின்றீர்கள்?
ஆனாலும், ஏனென்றால், இரமணிதரன் சம்பந்தப்பட்ட விடயத்திலே இரமணிதரனே பதில் சொல்வது நியாயமில்லை என்பதாலே மற்றைய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருக்கின்றேன்.
/இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது/
இதற்கு தமிழ்மணம் என்ன செய்யவேண்டும்?
==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு
இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலைத்தான் சகோ இரமணிதரன் (தமிழ்மணம் சார்பாக) எழுதியிருக்கிறார். தவிர டெர்ரர் கும்மியில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்மணம் சார்பாக எழுதிவிட்டு, இப்போது அது இரமணிதரன் தனிச்சையாக எழுதியது என்று சப்பை கொட்டுகிறார்.
கமெண்ட் போட்டதில் தமிழ்மணத்திற்கும் சகோ இரமணிதரனுக்கும் சம்பந்தமில்லை என்றால் கீழே உள்ளதுக்கு என்ன அர்த்தம்??
சகோ இரமணிதரனுக்கு புரியவில்லையா? அல்லது தந்திரமாக பேசுவதாக நினைத்து மொக்கையாக காரணம் சொல்கிறாரா? தெரியவில்லை?
இதற்கு கண்டிப்பாக தமிழ்மணம் பதில் சொல்லியே ஆக வேண்டும். தவிர சக பதிவர்களை மரியாதை இல்லாத வார்த்தைகளில் பேசியது, வரம்பு மீறி வசை மழ பொழிந்தது போன்றவைகளுக்கு கண்டிப்பாக தமிழ்மணம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" - குர்ஆன் 5:2
பதிவர்கள் ஓற்றுமை ஓங்குக
கண்டனம் தெரிவிக்க விரும்புபவர்கள் admin@thamizmanam.com என்ற இணையதளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நான் தமிழ்மண ஓட்டுப்பட்டையை தூக்குவது பற்றி முடிவு செய்து விட்டேன் (தூக்குவதென்று). அப்ப நீங்க??
இது சம்பந்தமாக மற்ற பதிவர்களின் பட்டைய கிளப்பும் பதிவுகள்
அபு நிஹான்
டிஸ்கி : இந்த வருட கேவலமான பஞ்ச் டையலாக் : புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.