Thursday 27 January 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 2

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 படிக்க

ஊடகத்துறையில் தீவிரவாத செயல்களை முஸ்லீம்கள் செய்தாலோ அல்லது முஸ்லீம்கள் செய்ததாக குற்றம் (பொய் குற்றம்) சாட்டப்பட்டாலோ வரிந்து கட்டிக் கொண்டு தங்களின் பத்திரிக்கை தர்மத்தை(?) காக்க போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகமும், காட்சி ஊடகமும் முஸ்லீம்கள் ஒரு நல்ல விஷயத்திற்காக போராடினால் அதை வெளியிடுவதில்லை. கடந்த காலத்தில் ஒரு அமைப்பு இட ஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை அறிவித்து வெற்றிக்கரமாக முடித்த வேளையில் அதை பற்றி செய்தி ஊடகத்திலோ அல்லது காட்சி ஊடகத்திலோ பெரிதாக பேசப்படாதது மட்டுமல்ல செய்தியாக கூட சொல்லாதது மனதிற்கு மிகவும் வருத்ததை அளிக்கிறது (அந்த ஊர் பதிப்பகத்தில் சில செய்தித்தாள்களில் வந்ததை தவிர). அதே போல் முஸ்லீம்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களை பற்றி யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் அதை பரிசீலப்படுத்தாமல், முஸ்லீம் மக்கள் காயப்படுவார்களே என்று கூட நினைக்காமல் அப்படியே வெளியிட்டு தங்களின் முஸ்லீம் விரோத போக்கை அப்பட்டமாக சில செய்தி ஊடகங்கள் உலகுக்கு உணர்த்துகினறன. 

Wednesday 26 January 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1

 நடுநிலைமை(?)
இந்தியாவில் சுதந்தரம் அடைந்ததிலிருந்தே முஸ்லீம்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அதிகமான காலங்களில் முஸ்லீம்கள் தங்களுடைய நாட்டின் மீதுள்ள பற்றை அடுத்தவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டும் நிரூபித்துக் கொண்டும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

யாரோ ஒருவர், எங்கோ ஒருவர் திருடினால், கொலை செய்தால், வண்புணர்ச்சி செய்தால், மனைவியை துன்புறுத்தினால், விபச்சாரம் செய்தால், லஞ்சம் வாங்கினால், அடுத்த மதத்தவரிடத்தில் பகைமை கொண்டால், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால், குண்டு வைத்தால், திருட்டு டி.வி.டி விற்றால் அவர்களுடைய மதத்தை மறந்து அவர்களை மட்டும் வசைபாடும் இந்த சமுதாயம் மற்றும் மாஸ் மீடியா என்று சொல்லக்கூடிய அனைத்து ஊடகங்களும் அதே செயலை ஒரு முஸ்லீம் செய்தால் அவன் முஸ்லீம் என்ற காரணத்தினாலே அவனை மதத்தோடு தொடர்புபடுத்தி ஊடகங்களாலும், சமுதாயத்தாலும் வசைபாடப்படுவது நம் அனைவரும் அறிந்ததே.

சுதந்திர போராட்ட வீரத்தாய் - கரூர் நா. பியாரி பீபீ



இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது.

நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர். காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் பல இஸ்லாமிய தியாகிகள் தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக் கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது.

எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள் செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சி தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதை நாம் அறிவோம். இந்த நாடு அறியும்.

Tuesday 11 January 2011

மருத்துவமனைகளும் பொறுப்பற்ற அரசு அதிகாரிகளும்


மருத்துவமனைகள் இருக்கும் இடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை பற்றியும் அது எப்படி உதாசீனப்படுத்துகிறது என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

மருத்துவமனை என்பது நம் வீட்டை விட சுத்தமாக இருக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் என்று அனைவரும் இருக்கும் இடத்தில் ஒட்டுதல் (infection) ஆகாமல் இருக்க என்ன வழி என்பதை அறிந்து அதன்படி செய்லபட வேண்டும். இன்று பல மருத்துவமனைகள் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்குவதால் அவர்களுக்கு இதன் மீதெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை/ தோணவில்லை. 

Monday 10 January 2011

நைனா! படா உஷாராக்கீனும் (எச்சரிக்கியா இருக்கனும்) - பகுதி - 2

ஏர்போர்ட் கார் பார்கிங் - பழைய போட்டோ 
சென்னை விமான நிலையத்தில் பிச்சை

சென்னைவிமான நிலையத்தில் விரிவாக்க பணிகளால் புறப்பாட்டுக்கும், வருகைக்கும் ஒருபக்க நுழைவாயில் (வெளியே) வைத்ததின் காரணத்தால் விமான நிலையத்தில் இருந்து டிராலியை தள்ளிக் கொண்டு வண்டியருகே வருவது மிகவும் சிரமமாகி விட்டது. ஒருபக்கம் தொடந்து வரும் வண்டிகள், மறுபக்கம் மக்களின் கூட்டம் மற்றும் மழை என்று மிகுந்த சிரமத்தோடு வண்டியை வந்தடைந்தோம். எங்களை தொடந்து கொண்டே வந்த ஒரு நபர் “தான் ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும், எங்களுடைய பொருட்களை (luggages) தான் விமானத்திலிருந்து இறக்க உதவி செய்ததாகவும், தனக்கு ஏதாவது தரும்படியும் (பிச்சை – லஞ்சம்) எங்களிடம் கேட்டார். நான் அவரிடம் உங்களுக்கு ஏன் நாங்கள் பணம் தர வேண்டும், தர முடியாது என்று கடுமையாக சொல்லி விட்டேன். சார் நான் அப்படி கேட்கலை, நீங்க பார்த்து ஏதாவது கொடுங்க (பிச்சை போடுங்க) என்று கேட்டார், நான் இறுதிவரை தர முடியாது என்று கூறியவுடன், சார் நான் கஸ்டம்ஸிலிருந்து வருகிறேன். அவர்கள் தான் என்னை உங்களிடம் அனுப்பினார்கள் என்று தைரியமாக கூறினான். நான் இந்த தடவை மிகவும் சாதரணமாக கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நாங்கள் கஸ்டம்ஸை தான் கடந்து வந்திருக்கிறோம், ஒன்றும் தர முடியாது என்று கூறியவுடன், நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெனாவெட்டாக எங்களிடம் சவால் விட்டு அடுத்த மகிழ்வுந்தை நோக்கி ஓடினான். 

Thursday 6 January 2011

அமீரக அடையாள அட்டை - ஒரு கற்பனை

அமீரக அடையாள அட்டை (என்னுதில்லை)
தற்போது அமீரகத்தில் எல்லோரும் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அபுதாபி போன்ற நகரங்களில் கார், பைக் லைசன்ஸ் எடுப்பதற்கு, விசா புதிப்பதற்கு கூட அடையாள அட்டை தேவையென சொல்லியிருப்பதால் மக்கள் அடையாள அட்டை எடுப்பதற்கான மையங்களை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து அங்கேயே குடும்பம் நடத்தாத குறையாக காத்து கிடந்தனர். அடையாள அட்டை எடுப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30 2011 என்று மாற்றிய பிறகு தான் மக்களிடத்தில் டென்ஷன் குறைந்து போனது. 

அப்படி அமீரக அடையாள அட்டையில் என்ன விபரங்கள் இருக்கும், நம்முடைய பாஸ்போர்ட் விபரங்கள், விசா விபரங்கள், நம்முடைய ஸ்பான்ஸர் பெயர், கம்பெணி பெயர், கார், பைக் இருந்தால் – அதனுடைய விபரங்கள், நம்முடைய அலுவலக, இருப்பிட முகவரி, மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண், நம்முடைய வங்கி கணக்கு என்று நம்முடைய முழு விபரங்களும் அதில் இருக்கும். 

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

TNPSC Office
IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.

Wednesday 5 January 2011

நைனா! படா உஷாராக்கீனும் (எச்சரிக்கியா இருக்கனும்) - பகுதி - 1


இந்த தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல் ) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம். எல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டை கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார். 

Sunday 2 January 2011

இன்றைய அரசியல் ஒரு பார்வை


ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுதல் தொடரும் அப்படின்னு புரிஞ்சுக்கலாமா?


ஊருக்குள்ள பிரச்சனைன்னா நாட்டாம்மைக்கிட்ட போவோம், ஆனால் அந்த நாட்டாம்மைக்கே பிரச்சனைன்னா??


எந்த வெற்றின்னு உடன் பிறப்புகளுக்கு சொல்லிடுங்க, ஊழல் வெற்றின்னு தவறா புரிஞ்சிக்கப் போறாங்க

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...