Wednesday 25 August 2010

அரசியல் வா(வியா)திகளின் 2010 தேர்தல் களத்தில் நகைச்சுவை:

கருணாநிதி : ஊழலைப்பற்றி விஜயகாந்த் பேசுவது வாய்விட்டுச் சிரிக்கும் கேலியாக இருக்கிறது. 

பி.கு: ஊழல் செய்தவர்கள் தான் ஊழலை பற்றி சொல்ல வேண்டும் என்று கூறுகிறாரோ என்னவவோ?

நகைச்சுவை


இரான் பாக்ஸ்
துபையில் என் நண்பருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஆஃபிஸ் பாயுடன் என் நண்பர் ஒர் ஷாப்பிங் மால் சென்றிருக்கிறார், அங்கு பொருட்கள் வாங்கினால் கூப்பன் கொடுத்து குலுக்கல் முறையில் பரிசுகள் உண்டு என்று அறிவிப்பு பலகையில் அறிவித்ததோடு என்னென்ன பரிசுகள் என்பதையும் அறிவித்திருந்தனர். அதில் ஒரு பரிசாக இரான் பாக்ஸ் அன்று ஆங்கிலத்தில் எழுதிருப்பதை கண்ட அந்த ஆஃபிஸ் பாய் என் நண்பரிடம் இரான் பாக்ஸ் என்றால் என்ன என்று கேட்க இவரும் குழம்பியவாறு அந்த அறிவிப்பு பலகையை பார்த்து அது இரான் பாக்ஸ் இல்லை, ஐயன் (Iron Box) பாக்ஸ் என்று விளக்கிவிட்டு அலுவலகத்தில் வந்து எல்லோரிடமும் சொல்லிவிட்டார். அதில் ஒருவர் விளையாட்டாக இரான் பாக்ஸுக்கு சொன்ன விளக்கம்: ஈரமான துணிகளை தேய்ப்பதால் (ஐயன் செய்வதால்) அது ஈரான் பாக்ஸ், அப்போது குறுக்கிட்ட ஒரு நண்பர் அப்போது சூடான துணிகளை தேய்த்தால் (ஐயன் செய்தால்) அதற்கு பெயர் சூடான் (Sudan) பாக்ஸா என்று கேட்டவுடன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். 

----------------------------- 

Sunday 22 August 2010

அபராத பயத்தில் அமீரக (துபை) மக்கள்

Burj Khalifa
துபை என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பிரமாண்டம் (உலகத்திலேயே உயர்ந்த கட்டடம் - புர்ஜ் கலீஃபா, உலகத்திலேயே பெரிய ஷாப்பிங் மால் – துபை மால், துபை மெட்ரோ) . சமீப காலங்களாக துபை என்றவுடன் நினைவுக்கு வருவது பொருளாதார பின்னடைவு, வேலையிழப்பு, கடுமையான கடனில் தவிக்கும் நிறுவணங்கள் & மக்கள் மற்றும் எங்கும் சோகத்துடன் கானும் வெளிநாடு வாழ் அமீரக மக்கள். 

இதையெல்லாம் தாண்டி ஒரு புதிய பீதியால் துபை மக்கள் பெரிதும் பயந்து போய் இருக்கின்றனர். ஆம் அது தான் அபராத பீதி. முன்னெல்லாம் வாகனங்கள் வைத்திருக்கக் கூடியவர்கள் மட்டுமே பயப்படும் ஒரு விஷயமாக இருந்த அபராதம் இப்போது அமீரகத்தில் குறிப்பாக துபையில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் பயப்படும் ஒரு விஷயமாக சமீப காலமாக மாறியிருக்கிறது. 

Wednesday 18 August 2010

பார்வை ஒன்றே போதும்






ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்'' என்று கூறினேன்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், ''முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்'' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி),  நூல் : புகாரி 58

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும்.  அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.  இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

Sunday 15 August 2010

சாலையில் அதிவேக பயணம் – ஒரு சமூக பார்வை

model accident
சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. 

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 50 கிலோ மீட்டர் வேகத்திற்குமேல் செல்வது சட்டப்படி குற்றம். அவ்வாறு சட்டத்தைமீறி அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டினால் வழக்கு தொடரப்படும். இரண்டு முறைக்கு மேல் வழக்கில் சிக்கினால் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். 

ஆர்டிஓ அலுவலகம் மூலம் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தாமதம் ஏற்படுவதால் போலீசாரே அதனை ரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசை கோரியிருக்கிறோம். அரசு அது பற்றி பரிசீலித்து வருகிறது. அனுமதி கிடைத்ததும் அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.

Wednesday 11 August 2010

90,000 ஆப்கனிஸ்தான் போர் ஆவணங்கள்

ஆப்கனிஸ்தான் போர் குறித்து கிட்டத்தட்ட 90,000 ரகசிய ஆவணங்களை இணையத்தில் மொத்தமாக வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் என்னும் அமைப்பு. அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் குறித்த பல உண்மைகள் இதிலிருந்து கசிய ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா குறித்து இதுவரை வெளிவந்துள்ள ரகசியங்களில் இதுவே ஆகப் பெரியது என்கிறது விக்கிலீக்ஸ். அனைவருக்கும் விஷயம் போய் சேரவேண்டும் என்பதற்காக இந்த 90,000 ஆவணங்களையும் துறை வாரியாகப் பிரித்து, வகுத்து, சீர்படுத்தி அளித்திருக்கிறார்கள். எதையும் எடிட் செய்யவில்லை. அமெரிக்காவின் போர் தந்திரம், கொல்லப்பட்ட ஆப்கனிஸ்தான் மக்களின் சரியான எண்ணிக்கை, பாகிஸ்தானுடன் அமெரிக்கா செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தங்கள், சிஐஏவின் திரை மறைவு நடவடிக்கைகள், அரசியல் பேரங்கள், அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் என்று பலவற்றை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இணையத்தில் வெளியிடுவதற்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ், தி கார்டியன், டெர் ஸ்பீகல் (ஜெர்மன் பத்திரிகை) ஆகிய இதழ்களுக்கு இந்த ஆவணங்களைச் சில வாரங்களுக்கு முன்பே அனுப்பிவிட்டது விக்கிலீக்ஸ். ஒரு ரகசிய வெப்சைட்டில் ஆவணங்களை ஏற்றிவிட்டு, அவற்றை இறக்கிக்கொள்வதற்கான கடவுச்சொல்லை இந்தப் பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அளித்துவிட்டார்கள். 

Tuesday 10 August 2010

கிலோபைட், மெகாபைட், ஜிகாபைட்……… ஜெட்டாபைட்

அப்பாவி அப்பாசாமி: அதென்ன ஜெட்டாபைட், ஏதாவது கராத்தே, கும்ஃபு மாதிரி சண்டையா?

5 வருடங்களுக்கு முன்னர் யாரிடமாவது (கனிப்பொறி அடிப்படை தெளிவு இல்லாதவர்களிடம்) கிலோபைட் என்றால் “ஏதோ படித்தவுங்க சொல்றிங்க, நமக்கு இந்த பைட் எல்லாம் தெரியாதுப்பா” என்று சொல்லிவிடுவர். ஆனால் இப்போது மொபைல் உபயோகிக்கும் அனைவரிடமும் புதிய மொபைல் வாங்கி இருக்கிறேன் என்று சொன்னால், எத்தனை GB கார்டு போடலாம்னு சொல்லு, wifi இருக்குதா, எத்தனை Mega Pixel கேமரா என்று விலாவாரியாக நம்மிடம் கேட்கின்றனர். 



அப்போது இந்த KB, MB, GB, TB (Tuberclosis இல்லை, இது வேற TB) அலகுகள் எதற்கு பயன்படுகின்றன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது. 

பொறியியல் கல்லூரி கலந்துரையாடல் (கவுன்சிலிங்)

நம் சமுதாய மக்கள் சிலருக்கு இன்னும் பொறியியல் / மருத்துவக் கல்லூரிகளில் சேருவது என்பது பெரும் மலைப்பாக இருக்கும். கிராமத்தில் படிக்கும் மாணவமணிகளுக்கு எந்த கல்லூரியில் சேர வேண்டும், எந்த பாடத்தில் சேர வேண்டும் என்பதில் பெரும் சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். பொறியியல் கல்லூரி கலந்துரையாடல் என்றால் என்ன? அதற்கு எப்படி நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழே காண்போம்.

கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவ-மாணவிகளில் (அவர்களின் பெற்றோரும் கூட) நிறைய பேர் பெரும்பாலும் முதன்முறையாக சென்னையைப் பார்க்கிறார்கள். கிராமப்புற வெள்ளந்தித்தனம் அசலாக வெளிப்படுகிறது. 'அக்கம் பக்கத்துலே கடை கண்ணியே இல்லியே? பட்டணத்துலே இருக்கறவங்க ஆத்திர அவசரத்துக்கு ஒரு சோடா குடிக்கக்கூட பஸ் ஏறி ரொம்ப தூரம் போவணுமோ?’ என்று பட்டணக்காரர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கிண்டி காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அருகில் குடியிருக்கும் ஒரே நபர் மாட்சிமை தாங்கிய கவர்னர் பெருமகனார் மட்டும்தான். எனவேதான் இங்கே கடை, கண்ணிக்கு வாய்ப்பேயில்லை.

இன்றைய சூழலில் முஸ்லீம் பெண்கள்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் மனதிற்கு கவலை அளிக்கின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் நடந்து வரும் முஸ்லீம்களே முஸ்லீம்களை அழிக்க நினைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. தென் மாவட்டங்களில் (தூத்துக்குடியில் சிறுவன் கழுத்தறுத்துக் கொலை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பாலியல் சம்பவங்கள்) சமீப காலத்தில் கடன் சம்பந்தமாக இருவேறு சகோதரிகள் சீரழிக்கப்பட்டு, வீடியோ படம் எடுத்து மிரட்டக்கூடிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. அரசியல் பலம், அதிகார பலம், அடியாள் பலம், காவல்துறை பலம் என்று பலவிதமான பலங்களைக் கொண்டும் இந்த வேலையை செய்யும் அக்கிரமக்காரர்கள் எந்த செயலை செய்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கூச்சப்படும் சந்தர்ப்பத்தை பயண்படுத்தி தப்பித்துக் கொள்கின்றனர். 

Monday 9 August 2010

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க


உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:


முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும். 

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும். 

பின்குறிப்பு: 

நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும். 



நன்றி : இந்நேரம். காம்


Sunday 8 August 2010

ஹஜ் பயணிகளுக்கு - விஷேஷ பாஸ்போர்ட்

காவல் துறை நிரூபண - சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு 8 மாத பாஸ்போர்ட்

முதல் பாஸ்போர்ட் சென்னையில் 15 நாளில் வழங்கப்பட்டது

காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது. 

வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது. 

சமீபத்தில் சவுதி அரேபியா சர்வதேச பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள்தான் தங்கள் நாட்டிற்கு ஹஜ்பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்தது 

இந்த நிலையில், ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்க மத்திய அரசு காவல் துறையின் நிரூ பண சான்றிதழ் இல்லாமலேயே 8 மாதம் செல்லத் தக்க தற்காலிக பாஸ் போர்ட்டுகளை வழங்கும்படி அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wednesday 4 August 2010

யெஸ் மெண் குழுவினர்

நம்பியவர்கள் ஏமாற்றப்படுவார்கள்! 


Yes Men? அப்படியென்றால் என்ன? திரைப்படம் போலல்லவா இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். திரைப்படங்களில் செய்யும் அனைத்து ஹீரோயிஸத்தையும் இரு நண்பர்கள் இணைந்து செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறார்கள். 

Andy Bichlbaum, Mike Bonanno இருவரும் The Yes Men குழுவைச் சேர்ந்தவர்கள். உலகின் பணக்கார நிறுவனங்களுக்கு இவர்கள் எதிரிகள். பிபிசி தொடங்கி நியூ யார்க் டைம்ஸ் வரை பல செய்தி நிறுவனங்கள் இவர்களைக் கண்டு அலறியிருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய அசாதாரணமான விஷயங்களை இந்த இருவரும் நிஜ வாழ்வில் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

எது பிடிக்கவில்லையோ அதுவாக மாறிவிடு என்பதுதான் இவர்களது சித்தாந்தம். புஷ்ஷின் அராஜக ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் அவர் பெயரில் கிண்டலாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தார்கள். (www.gwbush.com என்னும் முகவரியில் தொடங்கப்பட்ட அந்தத் தளம் தற்போது உபயோகத்தில் இல்லை.) என்னை அபாண்டமாகவும் அநியாயமாகவும் விமரிசனம் செய்கிறார்கள் என்று புஷ்கூட வருத்தப்பட்டுக்கொண்டார்.

Tuesday 3 August 2010

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

அமெரிக்க அதிபர் "பராக் ஹுசைன் ஒபாமாவுடன்" விவாதம் செய்ய நான் ஆவலாக உள்ளேன் என ஈரான் அதிபர் "அஹ்மத் நிஜாத்" கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்: "நான் ஒபாமாவை சந்திக்க விரும்புகிறேன். நான் வரும் செப்டெம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக அமெரிக்கா வருகிறேன்.

அந்நேரம் நான் அங்கு பராக் ஒபாமாவை சந்தித்து அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்: உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவ்விவாதம் நடைபெறவேண்டும் எனவும், யாருடைய கருத்தை மக்கள் அதிகம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்". இவ்வாறு அஹ்மத் நிஜாத் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

ஈரான் மீது பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஒபாமாவிற்க்கு அஹ்மத் நிஜாத் விவாதத்திற்க்கு அழைப்பு கொடுத்திருப்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : இந்நேரம்.காம்

Monday 2 August 2010

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் - பகுதி 1

ஏக இறைவனின் திருப்பெயரால் 

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, 'எனது தாயார் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்' என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், 'உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?' என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் போது, 'எனது இரத்தப் பிரிவும் அது தான். எனினும் நான் இதுவரை இரத்தம் கொடுத்ததில்லை. பயமாக இருக்கின்றது' என்று மகன் கூறுகின்றார். 

இது போல், மனைவிக்குப் பிரவச வேதனை, அறுவை சிகிச்சை என்று ஓடோடி வரும் கணவனிடம், நீங்கள் உங்கள் இரத்தத்தைக் கொடுத்து விட்டு, நீங்கள் கேட்கும் இரத்தப் பிரிவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அந்தக் கணவனின் முகத்தில் இறுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. அம்முகத்தில் பேயறைந்தாற்போல் ஒரு தோற்றம்! 

பிளாக் பெர்ரி போன்களுக்கு சவுதி, அமீரகத்திலும் தடை ?

துபாய் : பாதுகாப்பு காரணங்கள் கருதி ஏற்கனவே இந்தியாவில் பிளாக் பெர்ரி போன்களை தடை செய்ய இந்தியா பரீசிலித்து வருவதை இந்நேரத்தில் பிரசுரித்திருந்தோம். தற்போது அதே காரணங்களை கூறி வரும் அக்டோபரில் இருந்து பிளாக்பெர்ரி போன்களை தடை செய்ய போவதாக ஐக்கிய அரபு அமீரகமும் அதனை தொடர்ந்து சவூதி அரேபியாவும் கூறியுள்ளது.
இது பற்றி கருத்து கூறிய ஐக்கிய அரபு அமீரக தொலை தொடர்பு அதிகாரி பிளாக்பெர்ரியின் மின்னஞ்சல், அவுட்லுக் மற்றும் பிற வசதிகள் அரசின் கண்காணிப்பில் கொண்டு வர முடியாத படி கனடாவில் உள்ள சர்வரோடு இணைக்கப்பட்டிருப்பதால் நாட்டின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாய் உள்ளது என்று கூறினார்.
இது இறுதி முடிவு என்று கூறிய அவ்வதிகாரி பிளாக்பெர்ரி தங்கள் நிபந்தனைகளுக்கு கட்டுபட்டால் அவை அனுமதிக்கப்படும் என்றும் அதன் போட்டியாளர்களான் நோக்கியா, ஸாம்ஸங் போன்களில் எப்பிரச்னையும் இல்லை என்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் எடிஸலாட், தூ இரண்டும் இம்முடிவை ஆதரிப்பதாகவும் சொன்னார்.
அமீரக முடிவு பற்றிய செய்தி வெளியான சிறிது நேரத்தில் சவூதி அரசாங்கமும் பிளாக்பெர்ரியை தடை செய்வது குறித்து பரீசிலித்து வருவதாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பாதையை பிற வளைகுடா அரசுகளும் பின்பற்றினால் பிளாக்பெர்ரிக்கு பெரும் பிரச்னை ஏற்படும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: இந்நேரம்.காம்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...