Wednesday 17 October 2012

நீங்க சென்னையா தமிழ் நாடா?

எங்கு திரும்பினாலும் பவர் கட் பேச்சு தான். பவர் ஸ்டார் கைது பற்றி பரபரப்பு செய்தி பற்றி கொண்ட போது அதிகம் பற்றி கொண்டு எரிந்தது (பின்னே, இரண்டு பவரையும் ஒரே நேரத்துல கட பண்ணுனா சும்மா விடுவாய்ங்களா:)). சமீபத்தில் வந்த செய்திகளில் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் அறிவித்த / அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடந்து கொண்டு இருக்கின்றன சென்னையை தவிர. அப்ப சென்னை தமிழ்நாட்டுல இல்லையா?

Sunday 14 October 2012

முதல் 10 நாட்கள்

அஸ்ஸலாமு அலைக்கும். 
இந்த உலகை படைத்து பரிபாலித்து எல்லா உயிரினங்களுக்கும் உணவளித்து நம்மை மரிக்க செய்து பின் நம்மை உயிர்ப்பிக்க செய்வானே, அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் துல்காயிதாவில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் அல்லாஹ்வின் பேரருளால் மற்றுமொரு பெருநாளை எதிர்ப்பார்த்த வண்ணமாக இன்னும் சிறிது நாட்களில் துல்ஹஜ் மாதம் நம்மை அடைய இருக்கிறது. இந்த நன்நேரத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லித் தந்த வழியின்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அந்த இறைவன் நம் அனைவருக்கு அருள் என்ற பிரார்த்தனை செய்தவனாக நம் பதிவுக்குள் செல்வோம்.

Tuesday 9 October 2012

டாக் (விவாத) ஷோக்கள் - நிஜங்களை தொலைத்த நிழல்கள்

சீரழிவின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சீரியல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சி என்று எடுத்து கொண்டால் அது டாக் ஷோக்கள் எனப்படும் விவாத நிகழ்ச்சிகள் தான்.ஆனால் சில டாக் ஷோக்கள் எந்த அளவிற்கு மக்களை முட்டாள்களாக ஆக்குகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

 

Sunday 7 October 2012

இஸ்லாமிய எதிர்ப்பும், முஸ்லீம்களின் கடமையும் - தாவா தொடர்

அஸ்ஸலாமு அலைக்கும்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் மற்ற மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது. யார் இந்த நபர்? ஏன் இவருக்காக நாடு ரோட்டில் நின்று போராடுகிறார்கள் என்று மக்கள் ஆச்சர்யபடுகின்றனர் (ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலும், போது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், மற்ற மக்களின் சொத்துக்கோ, உயிருக்கோ பாதகம் ஏற்படும் வகையிலும் போராடியவர்களுக்கு எமது கண்டனங்கள். ஏனெனில் அது இஸ்லாம் கற்று தந்த வழி இல்லை)

Monday 1 October 2012

என்னை கதற வைத்த சென்னை

எனக்கும் சென்னைக்கும் இடையேயான உறவு சிறு வயது தொடங்கி அதிகமாக ஏற்போட்டோடு முடிந்து விடும். ஆம், என்னுடைய உறவினர்களை அழைக்க விமான நிலையத்துக்கு சென்று அழைத்து விட்டு விமான நிலையத்தையே சென்னை என்று நினைத்து சிட்டிக்கு செல்லாமலே திரும்பி விடுவோம். பிறகு 6 ஆவது வகுப்பு கோடை விடுமுறை (என்று நினைக்கிறேன்) யில் என்னுடைய உறவினர் வீட்டில் தங்கி ஒரு வாரம் ஊர் சுற்றி பார்த்து விட்டு வழக்கமாக செல்லும் மெரீனா பீச், பாம்பு பண்ணை பார்த்து விட்டு திரும்பினேன். அது தான் என் முதல் சென்னை சுற்று பயணம்.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...