Saturday 30 November 2013

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1

'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10 

ஊரில் செட்டிலாக வேண்டும் என்று பலர் சொல்லி கொண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் சொந்த ஊரில், சொந்த நாட்டில் போய் செட்டிலாக வேண்டுமென்ற எண்ணமே பெரிய விஷயம். இதை சமயம் பார்த்து தான் நம் வீட்டில் உள்ளவர்களிடத்தில் சொல்ல வேண்டும். இதனால் பலரிடத்தில் இருந்து கேட்காமலே பல இலவச அறிவுரைகள்(?) வரும். இன்னும் சிலர் அவனை பார்த்தியா, அவனும் உன்னை போல் தான் வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்றான், எவ்வளவு கஷ்டப்படுறான்னு பார்த்தியா அப்படின்னு கேட்பார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான எண்ணமும் திறமையும் இருக்காது, சில பேர் hard work பண்ணுவார்கள், சில பேர் smart work பண்ணுவார்கள். Smart work is better than Hard work. அதே போல் நம்மை யாருடனும் கம்பேர் செய்ய வேண்டாம் என்று உங்கள் குடும்பத்தில் கட் அண்டு ரைட்டாக சொல்லி விடுங்கள், இதில் நீங்கள் நளினத்தை / பணிவை மேற்கொண்டால் உங்கள் வீட்டிலேயே உங்களை மாற்றி விடுவார்கள். 

Sunday 22 September 2013

சத்துணவும், கை கழுவுதலும்

கடந்த சில மாதங்களாய் மூன்று வேறு சம்பவங்கள் சத்துணவினால் ஏற்பட்ட பாதிப்பை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். 18.09.2013 அன்று மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியிலும், 19.07.2013 அன்று நெய்வேலி என்எல்சி பள்ளியிலும், 03.01.2013 அன்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசமுத்திரம் அருகே உள்ள நாடியத்திலும் ஏற்பட்ட பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கி இருக்கிறது 

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் 

இலவச மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜரால் தொடங்கப்பட்டது. ஏழ்மையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்குக் கவர்வதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியையும் மனதில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

Thursday 18 July 2013

துபை வீடியோ – ஒரு எச்சரிக்கை பதிவு

அமீரக அரசு அதிகாரி தெற்கு ஆசிய ஓட்டுனரை அடித்தது சம்பந்தமாக வீடியோ ஒன்று எடுக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்டு அது முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அந்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு விஷயம் பரப்பப்பட்டது. இது சமூக வலைத்தளங்களால் மட்டுமே முடியும் ஒன்று. அவரை கைது செய்ததன் மூலம் அமீரக குறிப்பாக துபை காவல்துறையும் தன்னுடைய கடமையை செய்துள்ளது. அடி வாங்கியவர் அடித்தவர் மீது குற்றம் சுமத்தவில்லையென்றாலும் (புகார் கொடுக்கவில்லையென்றாலும்), வீடியோவை ஆதாரமாக வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

Monday 1 July 2013

வெளிநாட்டிலிருந்து டி.வி.வாங்கி வரப் போகிறீர்களா ?

imported TV. thanks google
வெளிநாட்டிலிருந்து பலர் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி வருவதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றனர். வெளிநாட்டிலேயே தயாரிக்கின்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வெளிநாட்டின் சூழலுக்கு ஏற்ப தயாரித்து விற்று விடுவார்கள். உதாரணத்திற்கு வோல்டேஜ் டிராப், அடிக்கடி மின்வெட்டு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்கள் வெளிநாடுகளில் இல்லாது இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் சர்க்யூட் வடிவமைத்து பொருட்களை தயாரித்து விடுவர். ஆனால் பெரும்பாலும் அந்த பொருட்கள் இந்திய சந்தைகளுக்கு ஏற்றதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் விலை விஷயத்தை பார்க்கும் போது கண்டிப்பாக பாரிய விலை வித்தியாசங்கள் இருக்கத் தான் செய்யும். அதை மட்டுமே கணக்கில் கொண்டு நம் மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இப்போது எலக்ட்ரானிக் பொருட்களின் வரிசையில் அதிகம் விரும்பி வாங்கி சொல்லும் பொருள் டிவி.

Saturday 8 June 2013

மரம் வளர்த்து அறம் செய்வீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


Planting is not a choice, its a must
இன்றைய மக்களின் ஜீவாதார தேவையான சுத்தமான காற்று எங்கு காணிலும் கிடைக்கவில்லை, ஏனெனில் அந்த காற்றை நாம் தான் வர வேண்டாம்னு சொல்லி தடுத்திட்டோம். சுத்தமான காற்றை தரக்கூடிய மரங்களை நாம் வெட்டுவதின் காரணமாக சுத்தமான காற்றை நாமே விரட்டுகிறோம். மரம் நடுவது என்பது உயிர் வாழ்வதற்கு ஒப்பாக தற்போது கருதப்படுகிறது. பூமி வெப்பமயமாதலை தடுப்பதற்கு மரம் வளர்ப்பும் ஒரு முக்கிய தேவையாகி இருக்கிறது.

Monday 3 June 2013

அகவை தொண்ணூறு தொட்ட மாபெரும்(?) கலை(?)ஞர்

கலைஞர் என்ற வார்த்தை கருணாநிதிக்கே பொருந்தும். ஏனெனில் கலைகளிலே நாடக கலையில் மிகவும் கை தேர்ந்தவராயிற்றேJ

கலைஞர் 90 வயதை அடந்து விட்டார் என்று எங்கெங்கிலும் அவருக்கு புகழ் மாலை சூட்டப்படுகிறது.

ஒருவர் 90 வயது வரை வாழ்ந்தால் அவர் செய்த தவறுகள் ஒன்றும் இல்லாமல் ஆகாது. எத்துனை எத்துனை துரோகங்கள் எம் முஸ்லீம் சமுதாயத்திற்கு.

Thursday 30 May 2013

வியாபாரம் - LKG to Engineering

இன்றைய கல்வி முறைகளில் பல விதமான முரண்பாடுகள் இருப்பதை கானும் போது வரும் காலத்தில் கல்வி என்பது பலருக்கு எட்டாத கணியாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் ஒரு எல்கேஜி படிக்கும் குழந்தைக்கு 24,000 ரூபாய் மாநகரத்தில இருக்குற பள்ளி கூடங்கள்ள கேட்குறாங்க. இது கூட பள்ளிக்கு பள்ளி மாறுபடும். இவ்வளவு கட்டணத்தை பெற்று கொண்டு art fees, craft fees, tution fees, bus fees, snack fees என்று ஏகப்பட்ட கட்டணங்களை வசூலித்து பெறும் காசு பார்க்கின்றனர் பள்ளி உரிமையாளர்கள். இந்த கொடுமையை கீழே இளையராஜா என்ற பல் மருத்துவர் பகிர்ந்துள்ளார், உங்கள் பார்வைக்கு.

Monday 6 May 2013

பொறியியல் படிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு


பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.

Sunday 7 April 2013

பொறியியல் கல்லூரிகள் - மாணவர்களுக்கு வைக்கப்பட்ட பொறிகளா?

சென்னை: எந்தவிதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத 200 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தவிர அதிக அளவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கல்லூரிக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதுப் பிக்க வேண்டும்.

கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்த கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கான அங்கீகாரத்தை வழங்க பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 520 தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகார பரிந்துரை குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 200 கல்லூரிகளில் அரசு தெரிவித்த கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...