Sunday, 7 February 2016

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் 

நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீது மக்களின் கவனம் அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் நம் பிள்ளையும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் US (அப்படின்னா உழவர் சந்தையா?) செல்ல வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைக்கும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம். 

சினிமா என்னும் கூறிய வாள்

தமிழக திரைப்படங்களில் முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதிகளாக காட்டும் விஷயத்திற்காக நாம் கொந்தளித்தால் (சமீபத்தில் வந்த விஸ்வரூபம்), நம் மாற்று மத சகோக்களான இந்து நண்பர்கள் இதற்கு ஏன் வருத்தப்படுகிறீர்கள், எங்கள் மதத்தையும் தான் கேலிக்குரியதாக்குகிறார்கள், எங்கள் மதத்தையும் தான் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களின் புரிதலுக்காகவே இதை பகிர்கிறேன். 

Saturday, 28 March 2015

நேர்மையின் பரிசு என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்க ஒரு அரசாங்க வேலையுல இருக்கீங்க, பெயர் வேணாம். நல்ல நேர்மையான அதிகாரியா இருக்கீங்க, தனியாளா இருந்த உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாய்ங்க. இது வரை இருந்த நேர்மைக்கு லைட்டா சோதனை வருது. மனைவி லேசா ஆரம்பிக்கிறாங்க, அவுங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறீங்க. ஊர் உலகத்துல இல்லாததானு சொல்றாங்க, அப்படியும் அவுங்க கிட்ட சொல்லி அவுங்க மனச மாத்துறீங்க. இலஞ்சம் வாங்காததால மிரட்டல் வருது. லைட்டா பயமா இருந்தாலும் சமாளிக்குறீங்க. பின்ன குழந்தை பொறக்குது. அந்த குழந்தைக்காகவாவது மாறுங்கன்னு சொல்றாங்க குடும்பத்தினர். எப்படிம்மா தப்ப சரினு இவுங்களால சொல்ல முடியுதுனு அம்மாகிட்ட அழுது புலம்புரீங்க. பொழைக்க தெரியாதவனா இருக்கியப்பா, இந்த காலத்துலையும் பிள்ளையை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சிருக்க என்று ஏச்சுகளும், பேச்சுகளும் வருது. இருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியா இருக்கீங்க. இதுவெல்லாவற்றையும் தாண்டி இலஞ்சம் வாங்காததால ஊர் மாற்றம் பணி மாற்றம்னு ஊர் ஊரா சுத்துறீங்க. யார் வாய அடைச்சாலும் மனைவியும், பிள்ளையும் ஊர் ஊரா மாறி / நாறி போறத விரும்பாம தினம் தினம் கரிச்சு கொட்டுறாங்க. 

Wednesday, 19 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 3


அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! - அல் குர்ஆன் 2:42


தொழில் செய்யும் இடத்தில் அரட்டை கூடாது:


சிலர் தொழில் செய்யும் இடத்தில் வீண் அரட்டை, அரசியல் என்று சகலமும் பேசுவார்கள். அவர்கள் கடையில் எப்போதும் ஒரு வெட்டி ஆஃபிஸர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. அரட்டை அடிக்கும் அப்பாடக்கர்கள், வேலை இல்லாத வெட்டி ஆஃபிஸர்களுக்கு பொழுது கழிக்க வேறு இடம் இல்லாததால் அவர்கள் உங்கள் கடையை நோக்கி வருகிறார்கள். முகதட்சனை பார்க்காமல் இங்கு கடை வியாபாரத்தை கெடுக்க வேண்டாம் என்று சொல்லி உங்கள் நண்பர்களுக்கு பறிய வையுங்கள். 
no chat

இப்படி எந்நேரமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தால் உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே வருவார்கள்; எப்படி? 

Monday, 17 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 2



அனுபவம் இல்லாத தொழிலை செய்ய கூடாது:

அனுபவம் இல்லாத வேலையை ஆரம்பிக்க கூடாது. உதாரணத்திற்கு நீங்கள் ஹோட்டல் வைத்தால் உங்களுக்கு புரோட்டாவும் போடத் தெரிய வேண்டும், டீயும் போடத் தெரிய வேண்டும். டீ / புரொட்டா மாஸ்டர் வரவில்லையென்றால் களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு கேவலமாக எண்ணவும் கூடாது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் டீ / புரோட்டா மாஸ்டர்களிடம் கடினமாக நடந்து கொண்டால் / அல்லது அவர்கள் திடீரென்று நோய்வாய்பட்டால் நாம் வேலை செய்ய கற்றிருந்தால் தான் அன்று கடை திறந்திருக்கும். இல்லையேல் கடையை அடைத்து விட்டு வீட்டில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு தொழில் செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு அதில் அனுபவம் இல்லையென்றால் சென்னை போன்ற நகரங்களில் அந்த தொழில் செய்யும் கூடத்தில் ஒரு 6 மாதம் வேலை செய்து தொழிலை கற்று கொண்டு, நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு தொழிலை ஆரம்பிப்பது நல்லது. இன்று பலர் தொழிலாளிகளை நம்பி தொழிலை ஆரம்பிக்கின்றனர், ஆனால் அந்த நம்பிக்கைக்குரிய தொழிலாளி தன்னுடைய கடையை விட்டு போனவுடன் செய்வதறியாது திகைக்கின்றனர்.

Sunday, 16 November 2014

கல்வி முதலீடா

அஸ்ஸலாமு அலைக்கும்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேரத்திலேயும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேரத்திலேயும், அதில் எடுத்த மதிப்பெண்கள் பற்றியும், அதில் தேறிய தவறிய மாணவ மாணவிகள் பற்றியும், தேர்ச்சி சதவிகிதம் பற்றியும் ஒரே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வியை வழங்குகிறோமா? நம்முடைய அடுத்த சந்ததிகளை சரியான முறையில் வழி நடத்துகிறோமா என்று கேட்டால் பெரும்பாலான இடங்களில் அது நேருக்கு மாறாகவே இருக்கிறது. உண்மையான கல்வி என்பது பொய்த்து போய் இன்று பலருக்கும் சங்கடம் தரும் கல்வியாகவே மாறி வருகிறது. இதற்கு பெருகி வரும் கல்வி கூடங்களும், தன் மகனும் / மகளும் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருக்கிறது. என்னது என் மகன் / மகள் நல்ல மதிப்பெண் பெறுவது என்பது என் மகன் / மகளுக்கு செய்யும் துரோகமா? என்று நீங்கள் கேட்டால் பெரும்பாலான இடங்களில் அது துரோகமாக தான் இருக்கிறது.

Saturday, 30 November 2013

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1

'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10 

ஊரில் செட்டிலாக வேண்டும் என்று பலர் சொல்லி கொண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் சொந்த ஊரில், சொந்த நாட்டில் போய் செட்டிலாக வேண்டுமென்ற எண்ணமே பெரிய விஷயம். இதை சமயம் பார்த்து தான் நம் வீட்டில் உள்ளவர்களிடத்தில் சொல்ல வேண்டும். இதனால் பலரிடத்தில் இருந்து கேட்காமலே பல இலவச அறிவுரைகள்(?) வரும். இன்னும் சிலர் அவனை பார்த்தியா, அவனும் உன்னை போல் தான் வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்றான், எவ்வளவு கஷ்டப்படுறான்னு பார்த்தியா அப்படின்னு கேட்பார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான எண்ணமும் திறமையும் இருக்காது, சில பேர் hard work பண்ணுவார்கள், சில பேர் smart work பண்ணுவார்கள். Smart work is better than Hard work. அதே போல் நம்மை யாருடனும் கம்பேர் செய்ய வேண்டாம் என்று உங்கள் குடும்பத்தில் கட் அண்டு ரைட்டாக சொல்லி விடுங்கள், இதில் நீங்கள் நளினத்தை / பணிவை மேற்கொண்டால் உங்கள் வீட்டிலேயே உங்களை மாற்றி விடுவார்கள். 

Sunday, 22 September 2013

சத்துணவும், கை கழுவுதலும்

கடந்த சில மாதங்களாய் மூன்று வேறு சம்பவங்கள் சத்துணவினால் ஏற்பட்ட பாதிப்பை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். 18.09.2013 அன்று மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியிலும், 19.07.2013 அன்று நெய்வேலி என்எல்சி பள்ளியிலும், 03.01.2013 அன்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசமுத்திரம் அருகே உள்ள நாடியத்திலும் ஏற்பட்ட பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கி இருக்கிறது 

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் 

இலவச மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜரால் தொடங்கப்பட்டது. ஏழ்மையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்குக் கவர்வதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியையும் மனதில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

Thursday, 18 July 2013

துபை வீடியோ – ஒரு எச்சரிக்கை பதிவு

அமீரக அரசு அதிகாரி தெற்கு ஆசிய ஓட்டுனரை அடித்தது சம்பந்தமாக வீடியோ ஒன்று எடுக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்டு அது முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அந்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு விஷயம் பரப்பப்பட்டது. இது சமூக வலைத்தளங்களால் மட்டுமே முடியும் ஒன்று. அவரை கைது செய்ததன் மூலம் அமீரக குறிப்பாக துபை காவல்துறையும் தன்னுடைய கடமையை செய்துள்ளது. அடி வாங்கியவர் அடித்தவர் மீது குற்றம் சுமத்தவில்லையென்றாலும் (புகார் கொடுக்கவில்லையென்றாலும்), வீடியோவை ஆதாரமாக வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

Monday, 1 July 2013

வெளிநாட்டிலிருந்து டி.வி.வாங்கி வரப் போகிறீர்களா ?

imported TV. thanks google
வெளிநாட்டிலிருந்து பலர் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி வருவதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றனர். வெளிநாட்டிலேயே தயாரிக்கின்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வெளிநாட்டின் சூழலுக்கு ஏற்ப தயாரித்து விற்று விடுவார்கள். உதாரணத்திற்கு வோல்டேஜ் டிராப், அடிக்கடி மின்வெட்டு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்கள் வெளிநாடுகளில் இல்லாது இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் சர்க்யூட் வடிவமைத்து பொருட்களை தயாரித்து விடுவர். ஆனால் பெரும்பாலும் அந்த பொருட்கள் இந்திய சந்தைகளுக்கு ஏற்றதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் விலை விஷயத்தை பார்க்கும் போது கண்டிப்பாக பாரிய விலை வித்தியாசங்கள் இருக்கத் தான் செய்யும். அதை மட்டுமே கணக்கில் கொண்டு நம் மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இப்போது எலக்ட்ரானிக் பொருட்களின் வரிசையில் அதிகம் விரும்பி வாங்கி சொல்லும் பொருள் டிவி.

Saturday, 8 June 2013

மரம் வளர்த்து அறம் செய்வீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


Planting is not a choice, its a must
இன்றைய மக்களின் ஜீவாதார தேவையான சுத்தமான காற்று எங்கு காணிலும் கிடைக்கவில்லை, ஏனெனில் அந்த காற்றை நாம் தான் வர வேண்டாம்னு சொல்லி தடுத்திட்டோம். சுத்தமான காற்றை தரக்கூடிய மரங்களை நாம் வெட்டுவதின் காரணமாக சுத்தமான காற்றை நாமே விரட்டுகிறோம். மரம் நடுவது என்பது உயிர் வாழ்வதற்கு ஒப்பாக தற்போது கருதப்படுகிறது. பூமி வெப்பமயமாதலை தடுப்பதற்கு மரம் வளர்ப்பும் ஒரு முக்கிய தேவையாகி இருக்கிறது.

Monday, 3 June 2013

அகவை தொண்ணூறு தொட்ட மாபெரும்(?) கலை(?)ஞர்

கலைஞர் என்ற வார்த்தை கருணாநிதிக்கே பொருந்தும். ஏனெனில் கலைகளிலே நாடக கலையில் மிகவும் கை தேர்ந்தவராயிற்றேJ

கலைஞர் 90 வயதை அடந்து விட்டார் என்று எங்கெங்கிலும் அவருக்கு புகழ் மாலை சூட்டப்படுகிறது.

ஒருவர் 90 வயது வரை வாழ்ந்தால் அவர் செய்த தவறுகள் ஒன்றும் இல்லாமல் ஆகாது. எத்துனை எத்துனை துரோகங்கள் எம் முஸ்லீம் சமுதாயத்திற்கு.

Thursday, 30 May 2013

வியாபாரம் - LKG to Engineering

இன்றைய கல்வி முறைகளில் பல விதமான முரண்பாடுகள் இருப்பதை கானும் போது வரும் காலத்தில் கல்வி என்பது பலருக்கு எட்டாத கணியாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் ஒரு எல்கேஜி படிக்கும் குழந்தைக்கு 24,000 ரூபாய் மாநகரத்தில இருக்குற பள்ளி கூடங்கள்ள கேட்குறாங்க. இது கூட பள்ளிக்கு பள்ளி மாறுபடும். இவ்வளவு கட்டணத்தை பெற்று கொண்டு art fees, craft fees, tution fees, bus fees, snack fees என்று ஏகப்பட்ட கட்டணங்களை வசூலித்து பெறும் காசு பார்க்கின்றனர் பள்ளி உரிமையாளர்கள். இந்த கொடுமையை கீழே இளையராஜா என்ற பல் மருத்துவர் பகிர்ந்துள்ளார், உங்கள் பார்வைக்கு.

Monday, 6 May 2013

பொறியியல் படிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு


பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.

Sunday, 7 April 2013

பொறியியல் கல்லூரிகள் - மாணவர்களுக்கு வைக்கப்பட்ட பொறிகளா?

சென்னை: எந்தவிதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத 200 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தவிர அதிக அளவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கல்லூரிக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதுப் பிக்க வேண்டும்.

கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்த கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கான அங்கீகாரத்தை வழங்க பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 520 தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகார பரிந்துரை குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 200 கல்லூரிகளில் அரசு தெரிவித்த கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

Sunday, 9 December 2012

அப்பாவிகளை குறிவைக்கும் டுப்பாக்கி

வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில் இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள் இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி! 

தீவிரவாதம் என்றாலே, அதை பைஜாமா + தாடியுடன் பாகிஸ்தானில் இருந்து வரும் பாய்மார்களுக்கு என ஒட்டுமொத்த குத்தகைக்கு கொடுத்து விட்டது தமிழ் சினிமா. முதலில் அந்த வேலையை ‘கேப்டன்’ என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டவர் செய்தார். அவரது படங்களில், பஸ்களில் பிக்பாக்கெட் அடிப்பவன் கூட பாகிஸ்தான் தீவிரவாதியாகத்தான் இருப்பான். உள்ளூர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து கொண்டு, விமானம் ஏறி டில்லி சென்று, சிபிஐ அதிகாரிகளைக் கூட ஓரங்கட்டி உட்காரச் செய்து விட்டு தனியாளாக நாட்டைக் காப்பாற்றுகிற ‘டகால்டி’ வேலைகளை அவரைக் காட்டிலும் தெளிவாகச் செய்ய இன்றுவரை ‘பீல்டில்’ ஆளில்லை. அவரளவுக்கு இல்லாவிட்டாலும், நிறைய படங்களில் ‘ஆக்ஷன் கிங்’ என்பாரும் நாட்டை காப்பாற்றினார். 

Saturday, 3 November 2012

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்


அஸ்ஸலாமு அலைக்கும்.

எல்லோரும் நலமா?

செய்தி தாள்களில் என்ன முக்கியமான செய்தி என்று பார்த்து கொண்டிருக்கையில் இந்த விஷயம் கண்ணில் பட்டது

Wednesday, 17 October 2012

நீங்க சென்னையா தமிழ் நாடா?

எங்கு திரும்பினாலும் பவர் கட் பேச்சு தான். பவர் ஸ்டார் கைது பற்றி பரபரப்பு செய்தி பற்றி கொண்ட போது அதிகம் பற்றி கொண்டு எரிந்தது (பின்னே, இரண்டு பவரையும் ஒரே நேரத்துல கட பண்ணுனா சும்மா விடுவாய்ங்களா:)). சமீபத்தில் வந்த செய்திகளில் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் அறிவித்த / அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடந்து கொண்டு இருக்கின்றன சென்னையை தவிர. அப்ப சென்னை தமிழ்நாட்டுல இல்லையா?

Sunday, 14 October 2012

முதல் 10 நாட்கள்

அஸ்ஸலாமு அலைக்கும். 
இந்த உலகை படைத்து பரிபாலித்து எல்லா உயிரினங்களுக்கும் உணவளித்து நம்மை மரிக்க செய்து பின் நம்மை உயிர்ப்பிக்க செய்வானே, அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் துல்காயிதாவில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் அல்லாஹ்வின் பேரருளால் மற்றுமொரு பெருநாளை எதிர்ப்பார்த்த வண்ணமாக இன்னும் சிறிது நாட்களில் துல்ஹஜ் மாதம் நம்மை அடைய இருக்கிறது. இந்த நன்நேரத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லித் தந்த வழியின்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அந்த இறைவன் நம் அனைவருக்கு அருள் என்ற பிரார்த்தனை செய்தவனாக நம் பதிவுக்குள் செல்வோம்.

Tuesday, 9 October 2012

டாக் (விவாத) ஷோக்கள் - நிஜங்களை தொலைத்த நிழல்கள்

சீரழிவின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சீரியல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சி என்று எடுத்து கொண்டால் அது டாக் ஷோக்கள் எனப்படும் விவாத நிகழ்ச்சிகள் தான்.ஆனால் சில டாக் ஷோக்கள் எந்த அளவிற்கு மக்களை முட்டாள்களாக ஆக்குகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

 

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...