Sunday 20 June 2010

தான்ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

ராஜகிரி தான் ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,​ பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ஏ.​ சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.​ ஆர்.டி.பி.​ கல்விக் குழுமத் தலைவர் எம்.ஏ.​ தாவுத் பாட்சா,​​ மருத்துவர் பரீதா பஷீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

​விழாவில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ,​​ மாணவிகள் பாராட்டப்பட்டனர்.​ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ள,​​ பள்ளியின் முன்னாள் மாணவிகள் எம்.​ சமீமா,​​ எம்.​ சைமா,​​ பி.​ மோசினா உள்ளிட்டோருக்கு பள்ளித் தலைவர் என்.ஏ.​ அப்துல் மஜீது நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

​முன்னதாக பள்ளி ஒருங்கிணைப்பாளர் எம்.​ முகமது உமர் வரவேற்றார்.​ நிறைவாக அரபி ஆசிரியை ஷகீலா பானு நன்றி கூறினார்.

விழாவில் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முகமது பாரூக்,​​ ஆர்.ஏ.​ நூர் முகமது,​​ நிர்வாக அதிகாரிகள் எம்.கே.​ அப்துல் ஹமீது,​​ பி.ஏ.​ முகமது பாரூக்,​​ பள்ளி முதல்வர் எஸ்.​ கஸ்தூரி,​​ துணை முதல்வர் பூங்கோதை,​​ வணிகவியல் ஆசிரியர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நன்றி : ராஜகிரி ஆன்லைன் இணையதளம்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...