Saturday 12 March 2011

இந்திய யூணியன் முஸ்லீம் லீக் - தேர்தல் பார்வை

IUML - DMK - Election Meet
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சேவையாற்றும் சரியான பிரதிநிதிகளை உருவாக்கும் பயிற்சி தளமாகவே இயங்கி வருவதே அதன் நோக்கம் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 64-வது நிறுவன தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னை சி.என்.கே. சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் கூறியதாவது- 

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 64-வது நிறுவன தினம் இன்று தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 
இன்று சமுதாய மக்கள் மத்தியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேர்தல் நிலைப்பாடு குறித்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் முஸ்லிம் லீகிற்காக ஒதுக் கப்பட்ட 3 தொகுதிகளில் ஒன்றினை கூட்டணி கட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்தது குறித்து பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

நமது இந்த முடிவினால் இந்திய தேசிய காங்கிரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் தங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினை தீர்த்துக் கொண்டதுடன் அகில இந்திய அளவில் முஸ்லிம் லீகிற்கு ஒரு கண்ணியமும், தனி மரியாதையும் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து நெகிழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 

நாம் எடுத்த இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இது நாள் வரை தனி இயக்கமாக செயல்பட்டு வந்த திருப்பூர் அல்தாப் தலைமையிலான தமிழ் மாநில தேசிய லீக், தாய்ச்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீகோடு இணைந்து செயல்படும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய இணைப்பு முயற்சியினை நமது கூட் டணியின் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களும், துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் முன்நின்று செய்து நம்மை பெருமைப்படுத்தியுள்ளனர். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நோக்கமானது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல. சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நல்ல முறையில் சேவையாற்றுவதற்கான சரியான பிரதிநிதிகளை உருவாக்கித் தருவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். 

கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நோக்கம் குறித்தும் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் 1962-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இல்லத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது காயிதெ மில்லத் அவர்கள் மிகத் தெளிவாக அளித்த பதில் என்னவென்றால் இந்தியாவில் முன்பு இருந்தது போன்று முகலாயர்களின் ஆட்சியை உருவாக்குவதற்காக அல்லது முஸ்லிம்களுக்கு என தனி நாட்டினை அரசாட்சியினை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் லீக் செயல்படவில்லை. மாறாக, இந்தியாவில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மைகளை பாதுகாப்பதற்காகவும், அவர்களது நியாயமான உரிமைகளை ஆட்சியாளர்களிடம் எடுத்துரைத்து, பெற்றுத்தருவதற்கான ஒரு அமைப்பாகவே முஸ்லிம் லீக் செயல்பட உள்ளது என கூறினார்கள். 

கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளின்படியே இன்றளவும் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது. நாம் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம்? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம்? என்பது முக்கியமல்ல. நமது உணர்வுகளை - உரிமைகளை சரியான முறையில் எடுத்துரைக்கக்கூடிய பிரதிநிதிகளை உருவாக்குவதற்கான பயிற்சி தளமாகத்தான் முஸ்லிம் லீக் செயலாற்றி வருகிறது. 

இன்று நமது சமுதாயத்தில் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அவையெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட்டா லும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு என தனி அரசாங்கத்தை உருவாக்கி விட முடியாது. என்ற யதார்த்த நிலையை புரிந்து கொண்டு தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்படுவதன் மூலம் சமுதாயத்திற்கு பணியாற்றுவதற்கான பயிற்சியினை பெற முடியும். அதன் மூலம் பலவித நன்மைகள் ஏற்படும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசினார். 

மேலே உள்ளது முஸ்லீம் லீக்கின் தேசிய பொது செயலாலரும், மாநில தலைவருமான கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் கூறியது. 

என்னுடைய கேள்வி என்னெவென்றால்: 

1. முஸ்லீம் லீக் சமுதாய் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொடுத்த மூன்றில் ஒன்றை விட்டுக் கொடுத்து என்று கூறிய பேராசிரியர் காதர் மொகிதீன் சாஹிப், விட்டுக் கொட்த்ததனால் சமுதாயத்திற்கு என்ன நலன் என்று தெரிவிப்பாரா? 

2. முஸ்லீம் லீக் தான் தேசிய இந்திய காங்கிரசுக்கும், திமுகவிற்கும் பாலமாக இருந்து ஒரு சீட்டை விட்டு கொடுத்து கூட்டணியை (திமுக-காங்கிரஸ் கூட்டணியை) ஓட்ட வைத்தது முஸ்லீம் லீக்கிற்கு எந்த வகையில் மரியாதையையும், கண்ணியத்தையும் தந்தது என்பதை விலக்க வேண்டும், அப்படி கிடைத்த மரியாதையையாளும், கண்ணியத்தாளும் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்பதை பேராசிரியர் விளக்குவாரா? 

3. // நாம் எடுத்த இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இது நாள் வரை தனி இயக்கமாக செயல்பட்டு வந்த திருப்பூர் அல்தாப் தலைமையிலான தமிழ் மாநில தேசிய லீக், தாய்ச்சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீகோடு இணைந்து செயல்படும் நிலை உருவாகியுள்ளது.// நீங்கள் எடுத்த இந்த துணிச்சலான(?) முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் வண்னமாக திருப்பூர் அல்தாப் அவர்கள் தாய்சபையில் சேர்ந்தது சமுதாயத்திற்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என்பதை பேராசிரியர் விளக்குவாரா? 

4. //கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளின்படியே இன்றளவும் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது. நாம் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம்? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம்? என்பது முக்கியமல்ல// அப்புறம் ஏன் தேர்தலில் நிற்கிறீர்கள், ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள், எத்தனையோ சமுதாய இயக்கம் இருப்பது போன்று நீங்களும் தேர்தலில் நிற்காமல் வெளியில் இருந்து ஆதரவு தரலாமே? 

5. //நமது உணர்வுகளை - உரிமைகளை சரியான முறையில் எடுத்துரைக்கக்கூடிய பிரதிநிதிகளை உருவாக்குவதற்கான பயிற்சி தளமாகத்தான் முஸ்லிம் லீக் செயலாற்றி வருகிறது// எவ்வளவு காலமாக பயிற்சியை மட்டும் கொடுத்து கொண்டே இருப்பீர்கள், பயிற்சியை மட்டுமே கொடுத்து கொண்டே இருந்தால் எப்போது களத்தில் இரங்குவீர்கள்? 

6. யாரும் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைக்க வேண்டும் என்று எண்ணவில்லை, எந்த விதத்தில் நீங்கள் எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்தாலும் இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடியாது என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. 

போனஸ் கருத்து: 

எல்லா சமுதாய மக்களும் 

முஸ்லீம்கள் இழிச்சவாயர்கள் என்று திமுக நினைத்துவிட்டது 
முஸ்லீம் லீக் வஞ்சிக்கப்பட்டு விட்டது, 
திமுக கொடுத்த மூன்றில் ஒன்றை பறித்து விட்டது 

E. Ahamed & Kader Mohieen
என்று திமுக மேல் கோபமாக இருக்கிறார்கள். அதை பொய்யாக்குவதற்காக பேராசிரியர் பேசின பேச்சும், தேசிய தலைவர் E. அஹமது பேசின பேச்சும் (அப்படி அவர் என்ன பேசினார்) முஸ்லீம் லீக், திமுக-காங்கிரஸ் உறவை ஒட்ட வைக்க வலிய வந்து கொடுத்த மூன்றில் ஒன்ரை தாரவார்த்து என்று உறுதிபடுத்துகிரது. திமுகாவை காப்பாற்றும் ராஜதந்திரத்தில் தங்கள் சமுதாய மக்கள் தங்களை வெறுத்தாலும் பரவாயில்லை என்று முஸ்லீம் லீக்கின் நிர்வாகிகள் நினைத்துவிட்டார்களோ என்னவோ??

இத்தோடு நிற்காமல் விட்டுக் கொடுத்த பரந்த மனப்பான்மை மூலம் முஸ்லீம் லீக்கின் புகழ் அரசியல் அரங்கில் மேலோங்கி விட்டது என்று திருமாவளவன் கூறியதாகவும், தி.மு.க.-காங். கூட்டணி ஏற்பட இ.யூ.முஸ்லிம் லீக் செய்த மெய் சிலிர்க்க வைத்த தியாகத்திற்காக தந்ததையும், தரவேண்டியதையும், தம்பியையும் தருவோம் என்று கலைஞரின் பாராட்டை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் பேசியதையும் முஸ்லீம் லீக்கின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பதை பார்த்தால் முஸ்லீம் லீக் கட்சி முஸ்லீம் லீக்கின் நன்மைக்கே பாடுபடும், முஸ்லீமின் நன்மைக்கு பாடுபடாது என்பதை பட்டவர்த்தனமாக முஸ்லீம் லீக்கின் நிர்வாகிகளே தெரிவிப்பது போன்று உள்ளது. கொடுத்த ஒரு மத்திய மந்திரி பதவிக்கே இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால்?? 

நன்றி : 


தோழமையுடன்
அபு நிஹான்

2 comments:

  1. முஸ்லீம் லீக்கின் இன்றைய நிலையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தேர்தலில் நிற்கும் நிலைப்பாட்டில் இவை எல்லாம் தவிர்க்க முடியாதவைகள். பார்ப்போம். முடிவு எப்படி இருக்கிறதென்று.

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

    தவிர்க்க முடியாத விஷயங்கள் என்பது வேறு, தங்களின் கூட்டணிக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் சமுதாயத்தையே அடகு வைப்பது என்பது வேறு சகோ சுவனப்பிரியன் அவர்களே.

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...