![]() |
பெற்றோரும் கல்வியும் |
என் மகன்/மகள் 10 ஆவது படிக்கிறான்(ள்), 12 ஆவது படிக்கிறான்(ள்). அவன்(ள்) இஷ்டத்திற்கு விட்டுட்டேன், அவன்(ள்) என்ன படிக்குனும்னு ஆசைப்படுறானோ(ளோ) அதையே படிக்கட்டும்னு நம்ம பெற்றோர்கள் பலர் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற ஞானம் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இது அவர்கள் கல்வி கற்காததால் வந்த பிரச்சனை. கல்வி கற்காமல் போனதற்கு நாம் அவர்களை குறை கூற முடியாது. ஆனால் இது பற்றி கல்வி கற்றவர்களிடம் ஆலோசனைக் கேட்கலாம். இது கேட்காமல் போனால் பிள்ளைகளை சரியான பாதைக்கு வழிகாட்டாமைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் ஆகிவிடுவர்.
சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்ற நபிமொழியில் உலகக் கல்வியின் அவசியத்தை நாம் அறியலாம்.