போன பதிவில் சரியான திட்டமிடலை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் தொழிலை பற்றிய நுண்ணறிவு மற்றும் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை நமக்கு நம்பகமான அந்த பிரச்சனை பற்றிய அறிவுள்ள நண்பர்களிடம் கலந்தாலோசிப்பது பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். நீங்கள் செய்யும் தொழில் எதுவாயினும் அதைப் பற்றிய அறிவும், எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்ற யுக்தியும் இருக்க வேண்டியது அவசியம். எங்களுடைய ஊரின் அருகே ஒருவர் ஒரு நான்கு சக்கர மெக்கானிக் ஷாப் (கேரேஜ்) வைத்திருந்தார். வெளிநாடுகளை போல எல்லாம் ஒரே இடத்தில் வைத்து தொழில் செய்யலாம் என்று ஆரம்பித்தார். ரிப்பேரிங், வல்கனைசிங், டிங்கரிங், பெயிண்டிங் என்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து சிறப்பாக தொழிலை ஆரம்பித்தார். சிறிது காலத்தில் அவரால் திறம்பட நடத்த முடியாமல மூடிவிட்டார். இதை பற்றி நான் இன்னொரு நண்பரிடம் கேட்ட போது அவருடைய சிந்தனை, அந்த தொழிலை பற்றிய அவரின் அறிவு என்னை யோசிக்க வைத்தது.
இறைவனின் வேதமும் தூதர் மொழியும் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்
Tuesday, 16 August 2011
Saturday, 23 July 2011
பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 3
போன பதிவில் விடா முயற்சி, மற்றும் கடும் உழைப்பை பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் சரியான திட்டமிடல் பற்றி எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்று பலரும் தொழில் செய்ய ஆர்வப்பட்டு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்திருக்கையில் எல்லோருக்கும் தோன்றுவது அந்த ஊரிலேயே இலாபம் தரக்கூடிய தொழில் எது என்று கூர்ந்து கவனித்து அந்த தொழிலை ஆரம்பிப்பது. இப்படி பார்த்து மட்டும் தொழிலை ஆரம்பிக்க கூடாது.
தொழில் தொடங்கும் போது யோசிக்க வேண்டியது
- ஆரம்பிக்கும் தொழிலை பற்றிய நுன்னறிவு நம்மிடம் இருக்கிறதா?
- தொழிலை ஆரம்பிக்க தேவையான பணம் மற்றும் தகுந்த இடம் போன்றவை கைவசம் இருக்கிறதா?
- இந்த தொழிலில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
- தொழில் ஆரம்பிக்கும் முன் ஏதெனும் தடங்கள் வந்தால் வேறு தொழில் செய்வதற்கான மாற்று சிந்தனை.
- தொழிலில் மேற்கொண்டு முதலீடு ஏதேனும் செய்ய வேண்டுமானால் அதற்கு தேவையான பணம் நம்மிடத்தில் இருக்கிறதா?
- செய்யும் தொழிலில் எந்த ஆள் துணை இல்லாமல் இருந்தாலும் தன்னால் மட்டும் கூட அந்த தொழிலை நடத்த முடியுமா? என்று ஆராய்வது மிக முக்கியம். உதாரணத்திற்கு ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் திடிரென்று புரொட்டா மாஸ்டர் ஹோட்டலுக்கு வராமல் விடுப்பு எடுத்தாலோ அல்லது வேலையை விட்டு நின்றாலோ முதலாளிக்கு புரோட்டா போட தெரிந்திருக்க வேண்டும். (இது எல்லா தொழிலுக்கும் ஒத்துவராது, சொல்லவந்தது தொழிலை பற்றிய அறிதல் வேண்டும்)
Thursday, 21 July 2011
Wednesday, 20 July 2011
பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 2
முந்தைய பதிவுகள் : பதிவு - 1
போன பதிவில் ஜித்தாவில் ஒரு பெண்மனி எப்படி தொழில் செய்ய கற்றுக் கொண்டு கணவனுக்கு உறுதுணையாய் இருந்து வாழ்வில் முன்னேறினார் என்று பார்த்தோம். இந்த பதிவிலும், இன்னும் தொடரும் பதிவிகளிலும் தொழில் பற்றிய எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
நம்மில் பெரும்பாலோர் தொழில் செய்வதில் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை. ஏனெனில் தொழில் செய்வதில் சாதகங்கள் இருப்பது போல் பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கொஞ்சம் உஷாராக இல்லாது போனால் முதலுக்கு மோசம் வரும் சூழ்நிலைதான்.
Tuesday, 19 July 2011
பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர்
நடுத்தர வயதுடைய ஒரு குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!
“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!
“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் எல்லா வகையிலும்- எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் …குடும்பார்த்தக் கடமைகளை ஒத்தி போடாமல், முடிந்தவரை முடித்துக் கொள்ள வேண்டும் …நம்முடைய தொழிலை உருவாக்க நான் பட்ட கஷ்டத்தை நீ அறிவாய் ! அந்தத் தொழில் எனக்குத் திடீரென ஏதாவது நிகழ்ந்துவிட்டாலும் தொடர்ந்து நடக்க வேண்டும்! திறம்பட நிர்வகிக்கப் பட வேண்டும் – அதனால்தான் கேட்கிறேன்… அப்படியான ஒரு சந்தர்ப்பம் நேரிட்டால், நீ என்ன செய்வாய்?”
Monday, 13 June 2011
KPN விபத்து - தொடரும் தீர்வில்லா பயணம்
![]() |
KPN Bus - After accident |
கடந்த ஜூன் 8ஆம் தேதி KPN ஆம்ணி பஸ்ஸில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த KPN ஆம்ணி பேருந்து, இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நேரிட்டதாக ஓட்டுனர் கூறியிருக்கிறார். காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான கேபிஎன் பேருந்து சென்னையிலிருந்து எட்டரை மணியளவில் திருப்பூருக்குக் கிளம்பியது.
Sunday, 12 June 2011
அமீரகத்தில் வெயில் கால மதிய இடைவேளை
![]() |
Ministry of Labour - Midday break Icon |
அமீரகத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து வெயில் காலத்திற்கான மதிய இடைவேளை (12.30 – 3.00) ஆரம்பிக்க இருக்கிறது. நான் இந்தியாவில் இருந்து அமீரகம் வந்தவுடன் பல விஷயங்களை பார்த்து வியந்து இருக்கிறேன். அடுக்குமாடி கட்டிடங்கள் என்னை பெரிதும் வியப்படைய செய்யவில்லை. ஆனால் அமீரகத்தில் குறிப்பாக துபையில் நாம் வாழ்வது இந்தியாவில் வாழ்வது போன்ற தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. எங்கு திரும்பினாலும் இந்தியர்கள், அரசு அலுவலகங்களில் கூட இந்தியர்கள், இந்தி பேசும் அமீரக குடி உரிமைகள் என பல விஷயங்களில் இந்தியாவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். வெற்றிலை முதல் மல்லிகைப்புவை வரை இங்கு கிடைப்பது பல இந்தியர்களுக்கு ஆச்சர்யமளிக்கும்.
Subscribe to:
Posts (Atom)
குழந்தைகள் ATM மெஷின்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...

-
நாமெல்லாம் ஒரு சாதரண பிரச்சணை என்றாலே மனம் உடைந்து என்ன செய்வது என்று கவலைப்பட்டு கொண்டிருப்போம். ஆனால் சிலர் என்ன பிரச்சனை நடந்தாலும் வாழ்...
-
டெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இ...
-
எனக்கும் சென்னைக்கும் இடையேயான உறவு சிறு வயது தொடங்கி அதிகமாக ஏற்போட்டோடு முடிந்து விடும். ஆம், என்னுடைய உறவினர்களை அழைக்க விமான நிலையத்து...